தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக பலரும் மருத்துவ படிப்பு முடிக்காமல், பலரும் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்ட போது, நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி செய்யலாமா? நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!!!
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “நீட் தேர்வு மூலமாக மட்டும் தான், ஏழை எளிய மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க முடியும். இல்லாவிட்டால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கோடிக்கணக்கில் செலவு செய்து படிக்க வேண்டிய நிலை உருவாகும். எனவே உயிரே போனாலும், நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம்.” என தெரிவித்துள்ளார்.