டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி செய்யலாம்? உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்தில் மனு!!!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி, திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரையிலும் நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்காத நிலையில், சிறையில் இருந்தவாறு டெல்லியை ஆட்சி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கெஜ்ரிவால் தரப்பினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், “அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது போல் பிரதமருக்கோ, முதல்வருக்கோ சிறையில் இருந்து ஆட்சி செய்ய, எவ்வித தடையும் இல்லை.” என குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனு தொடர்பான விசாரணை, விரைவில் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
கோயம்புத்தூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை!!!