தமிழகத்தில் இன்னும் ஓரிரு தினங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை விரைந்து மேற்கொண்டு வருகின்றனர். இதில் வாக்காளர் பெயர், ஓட்டுச்சாவடி அமைவிடம், வரிசை எண் உள்ளிட்டவை ஆகியவை இடம்பெற்றுள்ளன. வாக்களிக்கும் செல்லும் போது பூத் சிலிப் உடன் ஆதார், Voter ஐடி உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
அதன்படி ஓட்டுச்சாவடி அலுவலர்களை கொண்டு பூத் சிலிப் வழங்கும் பணியை, கடந்த 13ஆம் தேதிக்குள் முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் வரை 92.82 சதவீதம் பேருக்கு பூத் சிலிப்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் (ஏப்ரல் 16) பூத் சிலிப் வழங்க வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
அப்படியும் கிடைக்காதவர்கள், ‘Voter Helpline’ மொபைல் செயலி அல்லது தேர்தல் கமிஷன் இணையதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது பெயர் மற்றும் விபரங்களை குறிப்பிட்டு, ‘பூத் சிலிப்’-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Enewz Tamil WhatsApp Channel
T20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர்.. சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!!