லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

0
லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள் பலரும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணம் செய்ய பல்வேறு முன்னேற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.

தமிழக போலீஸ் தேர்வுக்காக காத்திருக்கீங்களா? உங்களுக்கு மாஸ் அப்டேட்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

அந்த வகையில் தமிழகத்தில் 10,000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை TNSTC இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று (ஏப்ரல் 18) சென்னை தாம்பரம் to நெல்லை இடையே சிறப்பு ரயில் (வ.எண். 06007) இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் இரவு 09.50 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும். அதேபோல் மறுமார்க்கமாக நெல்லையிலிருந்து நாளை (ஏப்ரல் 19) இரவு 7 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வந்தடையும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here