இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கோடை வெயில் அளவுக்கு அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் துபாயில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் உட்கட்டமைப்பு வைத்திருந்த துபாய் நகரத்தில், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் துபாய், அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய், சார்ஜா, குவைத் நாடுகளுக்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.