தமிழகத்தில் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேரடி அரசு ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும் என நீண்ட காலமாக பலரும் போராடி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்த போது, திமுக தேர்தல் வாக்குறுதி 177-ல், TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்குவோம் என குறிப்பிட்டு இருந்தது.
IPL 2024: 5 போட்டியில் 2 அரை சதம் விளாசிய சிவம் துபே.. இதே பார்மை உலக கோப்பையில் தொடருவாரா.?
தற்போது ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையிலும், இதுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை. இதையடுத்து திருச்சியில் உள்ள திமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு TET தேர்ச்சி பெற்ற பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போராட்டம் திமுக-வுக்கு சிக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.