தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை அனுசரிக்கும் விதமாக பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமண மதத்தின் பண்டிகைகளுள் ஒன்றான, மகாவீர் ஜெயந்தி நாளை (ஏப்ரல் 21) கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியீடு…, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!
இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சி கூடங்களும், ஜெயின் கோவிலில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள இறைச்சி கடைகளும், நாளை (ஏப்ரல் 21) மூட வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் இறைச்சி, மீன்கள் விற்பனைக்கு நாளை தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில நகராட்சி தெரிவித்துள்ளது.