தமிழக மீனவர்களே., இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்? வானிலை மையம் எச்சரிக்கை!!

0
தமிழக மீனவர்களே., இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்? வானிலை மையம் எச்சரிக்கை!!

கடந்த 14ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளதால், மீனவர்கள் விசைப்படகுகளை கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்திவிட்டு, பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இக்காலங்களில் நாட்டுப்படகுக்கு அனுமதி வழங்கப்படுவதால், ராமநாதபுரத்தை சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை வாழ் மக்களே., நாளை (ஏப்ரல் 21) இறைச்சி கடை செயல்படாது? மாநகராட்சி அதிரடி உத்தரவு!!!

இந்த சூழலில் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக சூறைக்காற்று வீசுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இச்சூறைக்காற்று 55 முதல் 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், ராமநாதபுரத்தை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள், அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here