நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் முதல் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், பல்வேறு பகுதிகளிலும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ரூ.50,000க்கு மேல் ரொக்கம் வைத்து இருந்தால் உரிய ஆவணங்களை காட்ட வேண்டும். இல்லையென்றால் பறிமுதல் செய்யப்படும்.
TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேரடி ஆசிரியர் பணி நியமனம்., தேர்தல் நேரத்தில் வலுக்கும் போராட்டம்!!!
அதேபோல் மது பாட்டில்கள் கொண்டு செல்வதற்கான வரைமுறையை மாநில அரசே நிர்ணயித்துள்ளது. அதன்படி மாநிலங்கள் வாரியாக இரண்டு முதல் மூன்று மதுபாட்டில்கள் வரை எடுத்துச் செல்லலாம் என தெரிவித்துள்ளார். குறிப்பாக உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரே ஒரு சீல் செய்யப்பட்ட மது பாட்டிலுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதற்கு மேல் இருந்தால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.