மக்களை உஷார்.. அடுத்த இரண்டு நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

0
மக்களை உஷார்.. அடுத்த இரண்டு நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!
தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு (ஏப்ரல் 15, 16) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 17 முதல் மார்ச் 19 ஆம் தேதி வரை மேலே குறிப்பிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடனே இருக்குமே தவிர அதிக பட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இத்தகைய வானிலை மாற்றத்தால் மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதால் எச்சரிக்கை எதுவும் அளிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here