இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பல்வேறு விதமான மோசடி செயல்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பலரும் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கான பணத்தை இழந்து தவிக்கின்றனர். இந்த சூழலில் இதுபோன்ற மோசடி செயல்களில் சிக்காமல் இருக்க பல்வேறு விழிப்புணர்வு அறிவிப்புகளை சைபர் கிரைம் போலீஸ் வெளியிட்ட வண்ணம் உள்ளது. ஒருவேளை ஆன்லைன் மோசடிக்கு ஆளாக நேரிட்டால், பணத்தை திரும்ப பெறுவதற்கு கீழ்க்கண்ட செயல் முறைகளை பின்பற்ற வேண்டும்.
உலக கோப்பைக்கான அணிகளை இந்த தேதிக்குள் அறிவிக்க வேண்டும்…, கட்டுப்பாடு விதித்த நிர்வாகம்!!
அதன்படி,
- அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் FIR அல்லது புகாரை பதிவு செய்ய வேண்டும்.
- அந்த ரசீதை பெற்றுக்கொண்டு வங்கிக்கு சென்று பிரத்யேகமான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
- பின்னர் மோசடிக்குள்ளாகி 3 தினங்களுக்குள், மேற்கண்ட இரு ஆவணங்களின் நகல்களையும் மின்னஞ்சல் CC-இல், RBI இன் [email protected] எனும் முகவரிக்கு புகார் தெரிவிக்க வேண்டும்.
- 7 நாட்களுக்குப் பிறகு புகார் செய்தாலோ, ஆன்லைன் கேம், பிட்காயின், போன்றவற்றில் பணத்தை இழந்தால், மீட்டெடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.