வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் சர்வதேச அளவிலான 20 அணிகளுக்கு இடையே T20 உலகக் கோப்பைத் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடர், தொடங்குவதற்கு முழுமையாக ஒன்றரை மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த உலக கோப்பை தொடருக்கு முன் IPL தொடர் நடைபெறுவதால் இதனை இந்திய அணி நன்கு பயன்படுத்திக்கொண்டு பயிற்சி பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பாக்கியலட்சுமி சீரியலின் கிளைமாக்ஸ் இதுதான்.., விரைவில் முடிவடைய போகிறதா?? லீக்கான அப்டேட்!!
இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான அணிகளை அறிவிப்பது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, மே 1 ஆம் தேதிக்குள் உலகக் கோப்பைக்கான ஆரம்ப அணியை அறிவிக்க வேண்டும். அணியில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுத்த விரும்பினால், அதனை மே 25 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி தரப்பில் இருந்து வெளியாகி உள்ளது.