தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, ஏப்ரல் 19ஆம் தேதி மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்து இருந்தது.
வங்கி வாடிக்கையாளர்களே., ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டீர்களா? திரும்ப பெற இதை செய்யுங்கள்?
இதைத்தொடர்ந்து தற்போது வாக்குப்பதிவு நடைபெறும் இரு தினங்களுக்கு முன்னதாகவும் விடுமுறையை அறிவித்துள்ளனர். அதன்படி பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.