டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை, சமீபத்தில் கைது செய்தது. அதைத்தொடர்ந்து ஜாமீன் கிடைக்காமல் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சர்க்கரை நோயாளியான அரவிந்த் கெஜ்ரிவால், சர்க்கரை அளவை அதிகரிக்க கூடிய உணவுகளை சாப்பிட்டு ஜாமீன் பெற முயல்கிறார் என அமலாக்கத்துறை புகார் தெரிவித்தது.
கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி., RBI வெளியிட்ட முக்கிய தகவல்.. முழு விவரம் உள்ளே!!
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், “நவராத்திரி பூஜை பிரசாதமான 3 மாம்பழங்களும், ஆலு பூரி மற்றும் சர்க்கரை இல்லாத இனிப்பு தான் சாப்பிட்டார்.” என கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். அதனைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.