2024 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னா சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் சென்னை மற்றும் லக்னோ அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஓர் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சமீபத்தில் வெளியான ICC விதிமுறையின்படி, ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இப்போட்டிக்கு பைன் போடப்பட்டுள்ளது.
அதாவது சென்னை மற்றும் லக்னோ அணிகள் விளையாடிய போட்டியில் மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-க்கும் , லக்னோ கேப்டன் கே எல் ராகுலுக்கும் 12 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ICC விதிமுறைகளின்படி, ஒரு ஓவர் குறைவாக வீசினாலே 20% அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.