நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு, “பிரதமரின் உஜ்வாலா யோஜனா” திட்டத்தின் மூலம் இலவச சிலிண்டர் இணைப்பு, மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 9 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வரும் நிலையில், பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
அதன்படி இத்திட்டத்தின் கீழ் தடையில்லாமல் தொடர்ந்து சிலிண்டர் மற்றும் மானியங்களை பெறுவதற்கு e-Kyc சரிபார்ப்பு செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். இந்த நடவடிக்கை முதல் கட்டமாக நிறைவு பெற்ற நிலையில், மற்ற இணைப்புகளுக்கும் விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். அப்படி இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்யாதவர்களின் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.