இன்றைய கால கட்டத்தில் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாட்ஸ்அப் மூலம் ஊழியர்களுக்கு தகவல்களை தெரிவித்து வருவது வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக நேரம் மிச்சமாவதோடு மட்டுமல்லாமல் விரைவாகவும் தகவல்கள் தெரிய படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதாவது உச்ச நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்கு விசாரணை உள்ளிட்ட விவரங்களை, அந்தந்த வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வழக்கறிஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.