சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, வாரியத் தேர்வு (பொதுத்தேர்வு) அண்மையில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து 2024 மே 12ஆம் தேதி தேர்வு முடிவுகளை, இணையதளத்தில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அடுத்த 2024-25ஆம் கல்வியாண்டில் இருந்து இரண்டு முறை வாரியத் தேர்வு நடத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திட்டமிட்டு வருகிறது.
அந்த இரண்டு தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்ணை தேர்வு செய்யலாம் என்றும் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இது தொடர்பாக விரிவான பரிந்துரைகளை மத்திய கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசு அனுமதிக்கும் பட்சத்தில், உடனடியாக அமலுக்கு கொண்டு வர மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
IPL 2024: CSK வெற்றி, லக்னோ தோல்வி.. முக்கிய கட்டத்தில் மாறிய புள்ளிப்பட்டியல்!!