தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், பல்வேறு கல்லூரி நிறுவனங்களும் மாணவர் சேர்க்கை குறித்து திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறப்பு குறித்த அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தொழில் சாராத படிப்புக்கான முதலாம் ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு, ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் வகுப்புகள் தொடங்க வேண்டும். அதேபோல் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, ஜூலை இறுதிக்குள் வகுப்புகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என யுஜிசி செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி தெரிவித்துள்ளார்.