IPL 2024 தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 31 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 223 ரன்கள் குவித்தது. அதன் பிறகு களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 224 ரன்கள் அடித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் மூலம் கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் சுனில் நரைன் ஓர் சாதனையை படைத்துள்ளார். அதாவது இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் ஹாட்ரிக் மற்றும் சதத்தை அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீரர் ரோகித் சர்மா மற்றும் ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வாட்சன் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.