சிறகடிக்க ஆசை சீரியலில் இன்னும் சில தினங்களுக்குள் உன்னுடைய அப்பா வரவில்லை என்றால் நீ இந்த வீட்டை விட்டு வெளியே போகணும் என ரோகினியை விஜயா எச்சரிக்கிறார். இதனால் இந்த விஷயத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் மீண்டும் தன் மலேசியா மாமாவை வரவைத்து ஒரு கதை சொல்கிறார். இதையும் குடும்பத்தில் உள்ள அனைவரும் நம்பிக் கொண்டு ரோகினி வருத்தத்தில் இருக்க அவருக்கு ஆறுதல் சொல்கின்றனர்.
ஆனால் முத்துவுக்கு மட்டும் ரோகினி செய்வதில் சந்தேகம் வர அந்த மலேசியா மாமாவை பின் தொடர்ந்து நடந்த விஷயம் என்ன என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்வாராம். அப்போதுதான் அந்த ஆள் மலேசியா இல்லை என்றும் ரோகினி இத்தனை நாள் வீட்டில் உள்ளவர்களிடம் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்ற விஷயம் முத்துவுக்கு தெரியுமாம். உடனே இந்த விஷயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி ரோகினியின் முகத்திரையை கிழிப்பாராம்.