ரயில்வே ஊழியர்கள் வாக்களிப்பதில் வந்த சிக்கல்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
ரயில்வே ஊழியர்கள் வாக்களிப்பதில் வந்த சிக்கல்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் தேர்தல் குறித்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்களவைத் தேர்தலில் ராணுவ வீரர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகளை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ரயில்வேயில் பணிபுரியும் ஓட்டுநர்கள், பயணச்சீட்டு பரிசோதரர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தபால் முறையில் வாழ்க்கை செலுத்த அனுமதி தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தபால் வாக்குகளை உடனடியாக அச்சடிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இதற்கு மனுதாரர் அப்போது ரயில்வே ஊழியர்கள் நேரில் வாக்களிக்க ஏதுவாக விடுப்பு வழங்க வேண்டும் என பதிலளித்துள்ளனர். இதையடுத்து சென்னை நீதிமன்றம் ரயில்வே ஊழியர்கள் நேரில் வாக்களிக்க விரும்பினால் அவர்களுக்கு விடுப்பு வழங்க தெற்கு ரயில்வே பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

விஜயின் ‘தளபதி 69’ படத்திலிருந்து பின் வாங்கிய தயாரிப்பு நிறுவனம்.. புதிய தயாரிப்பாளர் யார்?? முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here