தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நாள் நடைபெற உள்ளது. இதனால் அரசு ஊழியர்களும் பொதுமக்களும் தேர்தல் அன்று வாக்களிக்க ஏதுவாக பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் தேர்தல் நாள் அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தேர்தல் நாளில் விடுமுறை விடாமல் சில நிறுவனங்கள் இயங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். மேலும் ஊழியர்கள் விடுமுறை அன்று செயல்படும் நிறுவனங்கள் மீது 9790930846, 9884264814 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.