தமிழகத்தில் தலைவர்கள் தினம், ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் போது சட்ட ஒழுங்கு பாதிக்காமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வருகிற ஏப்ரல் 28,29,30 ஆகிய 3 தினங்களில் புது மாரியம்மன் கோவில் திருவிழாவினை மாவட்டம் முழுவதும் சிறப்பிக்க உள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு ஏப்ரல் 28 முதல் ஏப்ரல் 30 தேதி வரை, மதுரை மாவட்டத்தில் உள்ள அத்திப்பட்டி பகுதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். இந்நாட்களில் மாவட்டத்திற்குட்பட்ட மதுபான கடையோ, பார்களோ செயல்படுவதாக தெரிய வந்தால், டாஸ்மாக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.