தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றதாக போலியான மெயில் அனுப்பி மோசடியில் ஈடுபட்டதாக டிஎன்பிஎஸ்சி முன்னாள் ஊழியர் உட்பட பலர் மீது ராமநாதபுரத்தில் புதிய வழக்கு ஒன்று பதியப்பட்டு உள்ளது. அந்த மோசடி கும்பலை தற்போது போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
டிஎன்பிஎஸ்சி போலி மெயில்:
டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரபூர்வ மெயில் ஐடியை பயன்படுத்தி குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றதாக போலியான மெயில் அனுப்பி மோசடியில் ஈடுபட்டதாக டிஎன்பிஎஸ்சி முன்னாள் ஊழியர் ரமணி மற்றும் இடைத்தரகர் ராஹேந்திர ராவ் மீது ராமநாதபுரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சண்முகசுந்தரம் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
ஒரு போஸ்டிற்கு 27 லட்சம்:
தமிழ்நாடு காவல் ஆய்வாளர் தேர்விலும் முறைகேடு || TNUSRB SI Exam Issue
டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ மின்னஞ்சலை பயன்படுத்தி குரூப் 2 தேர்வில் தேர்வானதாக போலியான மெயில் அனுப்பி தேர்வர்களிடம் ஒரு போஸ்டிற்கு 27 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ராமநாதபுரம் போலீசார் அந்த மோசடியில் ஈடுபட்ட இருவரை கைது செய்து கும்பலை தேடி வருகின்றனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |