மோசடி வழக்கில் சிக்கிய நடிகர் பிரகாஷ்ராஜ்…, குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! 

0

தென்னிந்திய திரையுலகில் நடிகர், இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் என பல்வேறு கோணங்களில் தனது சிறந்த பங்களிப்பை பிரகாஷ் ராஜ் அளித்து வருகிறார். அபியும் நானும், கில்லி உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமான இவர், ஜுவல்லரி நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராகவும் இருந்து வருகிறார். அந்த வகையில், விளம்பர தூதுவராக தமிழகம் முழுவதும் பல கிளைகளுடன் இயங்கி வந்த பிரணவ் ஜுவல்லரிக்கு இருந்துள்ளார்.

சமீபத்தில், இந்த பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால் மூடப்பட்டது. இதையடுத்து, பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை இந்த பிரணவ் ஜுவல்லரி தொடர்பான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான பொன்சி திட்ட முறைகேடு குறித்து சமீபத்தில் சம்மன் அளித்தது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மதனை குற்றப்பிரிவு போலீசார் விசாரித்ததில் “நடிகர் பிரகாஷ் ராஜ் விளம்பரத்தில் மட்டுமே நடித்தார். இவருக்கும் இந்த மோசடிக்கும் எந்த தொடர்பும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

தோனிக்கு கிடைத்த சிறந்த அங்கீகாரம்…, பிசிசிஐ செய்த சிறப்பு ஏற்பாடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here