இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 10 வது சீசனுக்கான போட்டி நேற்று (டிசம்பர் 14) டெல்லியில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் எப்.சி மற்றும் கேரளா ப்ளாஸ்டர்ஸ் ஆகிய இரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பலம் வாய்ந்த கேரளா அணி, ஆட்டத்தின் முதல் பாதியில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு கோல் அடிப்பதற்கு கடுமையாக போராடியது. ஆனாலும், ஆட்டத்தின் முதல் பாதி கோலின்றியே முடிந்தது.
இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் கேரளா வீரர் டிமிட்ரியோஸ் கோல் ஒன்றை அடித்து அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க பஞ்சாப் அணி வீரர்கள் கடுமையாக போராடியும் பலன் கிடைக்கவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில், கேரளா அணி 1-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.
Enewz Tamil WhatsApp Channel
மோசடி வழக்கில் சிக்கிய நடிகர் பிரகாஷ்ராஜ்…, குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!