இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக பேட்டிங், விக்கெட் கீப்பிங், கேப்டன்சி என மூன்று விதத்திலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர். மேலும், 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் எம். எஸ். தோனி குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இவர் செய்துள்ள பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் ‘7’-க்கு பிசிசிஐ நிர்வாகம் ஓய்வு அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஜெர்சி ‘7’- ஐ இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் பயன்படுத்த முடியாது. முன்னதாக சச்சினை கௌரவிக்கும் வகையில் அவரது ’10’ ஜெர்சியை கடந்த 2017 ஆம் ஆண்டு பிசிசிஐ ஓய்வு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.