அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் நியமன முறைகேடு – 450 போலி பிஎச்.டி பேராசிரியர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை..!

0
Anna University
Anna University

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் உள்ள தனியார் கல்லூரிகளில் போலி பிஎச்.டி கொடுத்து பணியில் சேர்ந்த 450 பேராசிரியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

போலியான கல்வி சான்றிதழ்கள்:

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர் ஆக பணிபுரிபவர்கள் பலர் போலி பிஎச்.டி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புகார் வந்தது. இது குறித்து விசாரித்து பேராசிரியர்களின் கல்வித் தகுதி, சான்றிதழ்களின் உண்மைத்தன்மை போன்றவற்றை சரிபார்த்து அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.

மார்ச் 16 காலக்கெடு:

மார்ச் 16ம் தேதிக்குள் இந்த விசாரணையை முடித்து அறிக்கை அளிக்குமாறும் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. அந்த வகையில் சுமார் 450 பேராசிரியர்கள் போலியான பிஎச்.டி சான்றிதழ்களை சமர்ப்பித்து பணியில் சேர்ந்திருப்பது தெரிய வந்தது. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

எனவே போலி பேராசிரியர்கள்களை உடனடியாக பணிநீக்கம் செய்து அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அந்தந்த கல்லூரி முதல்வர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here