கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு.,  22 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவு!!

0
கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு.,  22 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவு!!
கடந்த 2014 ஆம் ஆண்டு திருமங்கலம்  பகுதியில் உள்ள கல்லூரி மாணவிகள் மீது சங்கர நாராயணன் என்பவர் ஆசிட் வீசி இருந்தார். இதையடுத்து ஆசிட் வீசியவரின் தந்தையே மாவட்ட எஸ்.பியிடம் தனது மகனை பிடித்து கொடுத்தார். இந்த பரபரப்பு சம்பவத்தை அடுத்து சங்கர நாராயணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
மேலும் இந்த வழக்கு 9 ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இப்படி இருக்கையில் தற்போது இந்த வழக்கிற்கு மதுரை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  அதாவது சங்கர நாராயணன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் சரிவை சந்திக்காத காய்கறிகளின் விலை…, இப்போ ஒரு கிலோ எவ்வளவு விற்குது தெரியுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here