முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்த அமலாக்கத்துறை., உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு!!!

0

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து, திகார் சிறையில் அடைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை, கெஜ்ரிவால் தரப்பினர் தாக்கல் செய்து இருந்தனர். இது தொடர்பான வழக்கு, இன்று (மே 7) நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஆதாரங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.


இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், “முறைகேடுகளை கண்டுபிடிக்க 2 ஆண்டு காலம் ஆகி உள்ளது என கூறுவது அழகல்ல. இந்த வழக்கின் காரணமாக ஒவ்வொரு புள்ளியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஒருவரை கைது செய்யும் போதே, சட்ட ஆதாரங்களை உறுதி செய்து இருக்க வேண்டும். எனவே இவ்வழக்கின் கோப்புகளில் அதிகாரிகள் எழுதிய முதல் 2 பாகங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி டெல்லி.., ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here