கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்தியாவில் 226 பேர் கொரோனா உறுதியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா..!
உலக சுகாதார அமைப்பு பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 2.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேல் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் 226 பேருக்கு கொரோனா..!
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது – சீனாவை முந்திய இத்தாலி..!
இந்தியாவில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களான மகாராஷ்டிரா , கேரளா, கர்நாடகா மற்றும் டெல்லி போன்ற இடங்களில் அதிக அளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு..!
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று 3 பேருக்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் , சென்னை பூந்தமல்லியில் இரண்டு பெண்களுக்கு கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு தருணத்தில் முதலமைச்சர் ராஜினாமா – பாஜக எம்எல்ஏ.,க்கள் சதி..!
திண்டுக்கல்லில் இருவர் கொரோனா அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கும்பகோணத்தில் இருவர் கொரோனா அறிகுறியால் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சியில் மேலும் 26 பேர் கொரோனா அறிகுறிகளுடன் கள்ளிக்குடியில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அங்கு கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |