உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.45 லட்சத்தையும், உயிரிழந்தர்வர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உயிர்கொல்லி நோயான கொரோனா..!
சீனாவில் தொடங்கிய உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது.
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – இந்தியாவில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு..!
இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.45 லட்சத்தையும் தாண்டி செல்கிறது. அதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.
உயிரிழப்பு சீனாவை முந்திய இத்தாலி..!
கொரோனா வைரசால் உயிரிழப்பு சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரசால் உயிரிழந்த நாடுகளில் இத்தாலி சீனாவை முந்தியுள்ளது.
கொரோனா பிறப்பிடமான சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 245 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 81 ஆயிரமாக உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பு..! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்வு..!
ஆனால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 405 ஆக உள்ளது. இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரமாக உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக ஈரானில் கொரோனாவால் 1,284 பேரும், ஸ்பெயினில் 831 பேரும், அமெரிக்காவில் 217 பேரும் உயிரிழந்துள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |