தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, இறுதி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா, உறவினர் வீடு என விடுமுறையை மாணவர்கள் சிறப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த 2024-25ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி திறப்பு குறித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
IPL வரலாற்றில் மோகித் ஷர்மா மோசமான சாதனை.. வெளியான முக்கிய அப்டேட்!!
அதன்படி “திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஜூன் 2ஆம் தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். விடுமுறை தினங்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது.” என தெரிவித்துள்ளார். ஆனாலும் ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.