இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 40 வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் குஜராத் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் மூலம் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் மோகித் சர்மா மோசமான சாதனையை படைத்துள்ளார். அதாவது இந்தியன் பிரிமியர் லீக் வரலாற்றில் ஒரு பந்துவீச்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். இந்த நிலையில் மோசமான சாதனை படைத்த மோகித் தொடர்பாக இணையத்தில் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.