நம் இந்திய மண்ணின் பாரம்பரிய விளையாட்டான கபடியை ஒலிம்பிக் போட்டிகளுக்கு எடுத்துச் செல்ல மத்திய அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்து உள்ளார்.
கோலோ இந்தியா திட்டம்:
பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘கேலோ இந்தியா’ என்ற திட்டத்தின் கீழ் மொத்தம், 2,880 விளையாட்டு வீரர் – வீராங்கனைகள், தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. சிறந்த விளையாட்டு வீரர்களை கண்டறிந்து நாட்டிற்கு அறிமுகம் செய்வது அந்தந்த மாநில அரசுகளின் கடமையாகும்.
மேலும் நமது உள்நாட்டு விளையாட்டான கபடியை ஒலிம்பிக் போட்டிகளுக்கு எடுத்துச் செல்ல அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |