கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஐபிஎல் தொடர் முழுவதும் ரத்தாகும் என தெரிகிறது. இதனால் பி.சி.சி.ஐ., க்கு ரூ.3,900 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
கொரோனா வைரசால் போட்டிகள் ரத்து..!
கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் கூட அரசு தடை விதித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரசால் பல்வேறு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் வரும் மார்ச் 29ம் தேதி நடக்க இருந்த 13 வது ஐபில் போட்டி ஏப்ரல் 15 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
பி.சி.சி.ஐ., க்கு நஷ்டம்..!
கொரோனா வைரசால் நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை பொதுமக்களுக்கு பாதுகாப்பு முக்கியம் என கருதி 13 வது ஐபில் தொடர் ரத்தாகும் என நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஒருவேளை தொடர் ரத்து செய்யப்பட்டால் பி.சி.சி.ஐ., க்கு பல கோடிகள் நஷ்டமாகும். நேரடி ஒளிபரப்பிற்கு ரூ .3,270 கோடியும், டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கு ரூ. 400 கோடியும் , ஆன்லைன் ஒளிபரப்பு வருமானம் என இந்த சீசனுக்கு ரூ.3,900 கோடி இழப்பு ஏற்படும் என தெரிகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |