நாடு முழுவதும் சுய தொழில் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயம் அல்லாத துறைகளில் குறுந்தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு, பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி உள்ளிட்ட தகுதிகளை வரையறுத்துள்ளனர். தகுதியும் ஆர்வமும் இருக்கும் பட்சத்தில் www.kvic.org.in/ அல்லது kviconline.gov.in/pmegpeportal என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் பெறக்கூடிய கடனுக்கு 35 சதவீதம் வரை மானியங்கள், 11 முதல் 12 சதவீத வட்டி வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.