தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – இந்தியாவில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு..!

0

அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மேலும் ஒருவர் கொரோனா வைரசால் பலியாகியுள்ளார்.

இந்தியாவில் மேலும் ஒருவர் பலி..!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 165 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 170 பேர் கொரோனா வைரசால் பாதிக்கபட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பு..! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்வு..!

இதையடுத்து, ஏற்கனவே கொரோனா வைரசால் கர்நாடகாவில் ஒருவரும், மராட்டியத்தில் ஒருவரும் மற்றும் டெல்லியில் ஒருவரும் இறந்துள்ள நிலையில் தற்போது பஞ்சாபில் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா..!

இந்த ரத்த வகை கொண்டவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும்..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 17 ம் தேதி சென்னை விமான நிலையம் வந்த அந்த இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது அறிந்து வீட்டில் தனிமைபடுத்தப்பட்டார். நேற்று அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here