ரேஷன் கார்டில் மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டம் என்ற திட்டத்தை ஏப்ரல் 1 இல் செயல்படுத்த போவதாக மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டம்.
ஒரு மாநிலத்தின் ரேஷன் கார்டு வைத்திருப்பவர் அந்த மாநிலத்தில் மட்டுமே சலுகைகளுடன் மானியத்தில் பொருட்களை வாங்க முடியும். ஆனால் இந்த ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் படி எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கார்டுகளை வைத்தும் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் மானியத்தில் பொருட்கள் வாங்கலாம்.
தமிழ்நாட்டிலும் அமலுக்கு வருகிறது
இதன் முதல் கட்டமாக ஜனவரி 1 இல் 12 மாநிலங்களுக்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பிறகு மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் ஜூன் 1 முதல் அனைத்து மாநிலங்களும் நடைமுறை படுத்த வேண்டும் என்று காலக்கெடு கொடுத்திருந்தார். தற்போது ஏப்ரல் 1 இல் தமிழகத்தில் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |