தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தொடர் கனமழை:
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
அக்டோபர் 7 ஆம் தேதி வெப்பச்சலனம் காரணமாக சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, திருவாரூர், தேனி, திருச்சி, கன்னியாகுமரி, கரூர், ராமநாதபுரம், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
குறையும் ஆனா குறையாது…!!– இன்றைய தங்க விலையால் மக்கள் கவலை!!
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு பகுதியில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வரும் 9 ஆம் தேதி அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகும்.
- அக்டோபர் 9 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அக்டோபர் 10 ஆம் தேதி அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
- அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மத்திய கிழக்கு மற்றும் மேற்கு வங்க பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட பகுதிகளுக்கு இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்கள் 8 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.