Thursday, April 25, 2024

6 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு மரணம் – உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு கொடூரம்!!

Must Read

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றது. ஹத்ராஸை பூர்விகமாக கொண்ட 6 வயது சிறுமி தனது உறவினர் ஒருவரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர் பாலியல் துன்புறுத்தல்கள்:

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் பாலியல் பலாத்கார குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த தலித் பெண் ஒருவர் 4 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டு மக்களை கொந்தளிப்பு அடைய வைத்துள்ளது. இப்படியான நிலையில் ஹதராஸ் மாவட்டத்தை தனது பூர்விகமாக கொண்ட 6 வயது சிறுமி ஒருவர் தனது உறவினர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளார்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள இக்லாஸ் என்ற பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தாய் மரணம் அடைந்ததை அடுத்து உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். கடந்த 10 நாட்களாக அவர் தனது உறவினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளார். இதனால் அவர் உடல்நலக் குறைவிற்கு ஆளாகி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

உறவினர்கள் போராட்டம்:

ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த சிறுமியின் உறவினர்கள் சாதாபாத் – பால்தேவ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

child raped in up
child raped in up

போலீசாரின் மெத்தன போக்கு தான் இதற்கு காரணம் என்று கூறி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனை அடுத்து சம்பத்தப்பட்ட போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 4 தேர்வர்களே., தேர்வுக்கு இப்படி தயாரானால் சுலபமாக தேர்ச்சி பெறலாம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழக அரசுத் துறையில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப் 4' போட்டித் தேர்வு அறிவிப்பை, TNPSC வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் 6,244...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -