பீட்டர் பாலின் முன்னால் மனைவி கொடுத்த வழக்கிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை வனிதா வீடியோ பேட்டி ஒன்றை கொடுத்து உள்ளார்.
வனிதா – பீட்டர் பால் திருமணம்:
நேற்று முன் தினம் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்தார். அவரது நெருங்கிய நட்புகள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர். பல்வேறு பிரபலங்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். கிறுத்துவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் பீட்டர் மீது புகார் அளித்து இருந்தார் மற்றும் வீடியோ பேட்டி ஒன்றில் வனிதாவை கடுமையாக சாடியிருந்தார்.
வனிதா பதில்:
இதற்கு, வனிதா ஒரு அறிக்கையை வெளிட்டு உள்ளார். அதில் ” அனைவரின் அன்பு, ஆசிர்வாதம் மற்றும் வாழ்த்துக்களுக்கு கடமை பெற்று இருக்கிறேன். எனது கடந்த காலம் மிகவும் மோசமானதாக இருந்தது என்று எல்லாருக்கும் தெரியும். தற்போது 7 வருடங்கள் தனியாக வாழ்ந்தோம் நானும், என் மகள்களும். அதற்கு பரிசாக நான் என் உண்மையான காதலை கண்டு பிடித்து விட்டேன். பீட்டர், உண்மையான, நேர்மையான, கனிவான ஒரு மனிதர்.
நாங்கள் கடவுளின் ஆசியால் ஒன்று சேர்ந்து உள்ளோம். நாங்கள் பைத்தியமாக காதலித்ததை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. அவர் திடிரென்று ஊடக வெளிச்சத்தில் இருப்பதால், பெயர் பலருக்கும் தெரிந்து இருப்பதால் சிலர் தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவில் 20,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு அளிக்கும் அமேசான் நிறுவனம்..!
நான் யாருடைய குடும்பத்தையும் பிரிக்கவில்லை. மரணம் எங்களை பிரிக்கும். நான் பைபிள் மீது சத்யம் செய்து உள்ளேன், அதனை காப்பாற்றுவேன்” என்று கூறியுள்ளார்.