இந்தியாவின் தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் போப்டே கடந்த ஞாயிற்று கிழமை ஹார்லி டேவிட்சன் சூப்பர் பைக்கை முயற்சிக்கும் புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக உலாவி வருகிறார்.
நீதிபதி ஷரத் அரவிந்த் போப்டே:
இவர் இந்திய உச்சநீதிமன்றத்தின் 47 வது மற்றும் தற்போதைய தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். இவர் 2021 ஏப்ரல் 23 அன்று ஓய்வு பெற உள்ளார்.
இவருக்கு பைக்குகளை அதிகம் விரும்பும் நபர் என்று கூறப்படுகிறது. தற்போது, நேற்று இவர், தன் ட்விட்டர் பக்கத்தில் ஹார்லி டேவிட்சன் CVO 2020 பைக்கை ஓடுவது போல் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். தனது சொந்த ஊரான நாக்பூரில் இந்த புகைப்படத்தை எடுத்து உள்ளார்.
பல விமர்சனங்கள்:
Chief Justice of India SA Bobde trying out Harley Davidson. (Harley Davidson Limited edition CVO 2020) @harleydavidson #SupremeCourt pic.twitter.com/6bDv0g4n2P
— Bar & Bench (@barandbench) June 28, 2020
சிலர் இந்த புகைப்படத்தை பார்த்து விட்டு அவர் மாஸ்க் மற்றும் ஹெல்மெட் அணியாமல் உள்ளனர் என்று சுட்டி கட்டி உள்ளனர், சிலரோ இந்த பைக் ஒரு அரசியல் பிரமுகர் ஒருவருடைய மகனின் பைக் என்றும் விமர்சித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்னால் தான் இவர் பைக் ஓட்டி அடிபட்டார் என்றும் கூறப்படுகிறது.
Chief Justice of India (CJI) SA Bobde .
The guardian of law or a law breaker ? No Mask , No helmet #COVIDIOTS #Covid_19 pic.twitter.com/ZdOAlgywYD— kŕṣṇa (@infestedbrain) June 28, 2020
இப்படி பல விமர்சனங்கள் எழுந்து உள்ள நிலையில், அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறியதாவது “அவர் இதில் உட்கார்ந்து தான் புகைப்படம் எடுத்தார். இந்த பைக் என்று கூட அவருக்கு தெரியாது. அவருக்கு தெரிந்த டீலர் ஒருவர் கொண்டுவந்து கொடுத்ததால் அவர் அதில் சும்மா உட்கார்ந்து அனுபவித்தார்” என்று கூறுகின்றனர்.