ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான கனமழை:
ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் அடுத்த 48 மணி நேரத்திற்கும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை மற்றும் மழைப்பதிவு:
தமிழகத்தில் வெப்பநிலையினை பொறுத்தவரை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டையில் உள்ள சோளிங்கர் பகுதியில் 23 செ.மீ மழை பதிவாகியுள்ளது, திருப்பத்தூரில் உள்ள வடபுதுப்பேட்டை பகுதியில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
ஆடையை காற்றில் பறக்கவிட்டவாறு போஸ் கொடுத்த சமந்தா – திக்குமுக்காடிய இணையதளம்!!
பொன்னை, வேலூர் மற்றும் அம்முண்டி பகுதிகளில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது, திருப்பத்தூர், ராம கிருஷ்ண ராஜு பகுதிகளில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது, குறைந்தபட்சமாக சிவகங்கை, திருப்பாக்கம் பகுதிகளில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- நவம்பர் 27 ஆம் தேதி வடகிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிபகுதிகள், வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நவம்பர் 28 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- நவம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதி தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டிசம்பர் 1 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளில் இந்த நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.