இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை:
தெற்கு அந்தமான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பொழிவு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஏனைய பகுதிகளில் லேசான மழை பெய்யும். டிசம்பர் 2 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி போன்ற மாவட்டங்களில் அதி கனமழையும், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும். டிசம்பர் 3 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
வெப்பநிலை மற்றும் கனமழை பொழிவு:
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 4 செ.மீ, திருவண்ணாமலை, சிவகங்கை, நாமக்கல் பகுதிகளில் 3 செ.மீ, பாபநாசம், வெம்பாக்கம், ஆத்தூர் பகுதிகளில் குறைந்தபட்சமாக 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகப்பட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் உருவானதை அடுத்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- நவம்பர் 30 (இன்று) தென் வங்கக்கடல் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- டிசம்பர் 1 ஆம் தேதி தென் மேற்கு வங்கக்கடல், தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- டிசம்பர் 2 ஆம் தேதி மன்னார் வளைகுடா, குமரிக்கடல், கேரளா கடலோர பகுதிகள், மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- டிசம்பர் 3 ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோர பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதன் காரணமாக மீனவர்கள் குறிப்பிடப்பட்ட நாட்களில் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலுக்கு சென்றவர்கள் விரைவாக கரைக்கு திரும்பவும் வலையுறுத்தப்பட்டுள்ளனர்.