நடிகர் விஜய்க்கு சங்கீதாவால் சொத்தில் ஏற்பட்ட பிரச்சனை – வெளியான தகவல்!!

0

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். மற்ற நடிகர்களை காட்டிலும் அதிக சம்பளம் வாங்கும் விஜய் இலங்கையில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். இந்நிலையில் அந்த சொத்துக்களை அந்த நாட்டை சேர்ந்த முதலாளிகள் கைப்பற்ற முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்

பிரபல இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் மகன் தான் விஜய். ஆரம்பத்தில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்த விஜய் தனது கடின உழைப்பால் மக்களின் மனதில் இளைய தளபதியாக வாழ்ந்து வருகிறார். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து மக்களின் கனவு நாயகனாக வலம் வருகிறார் விஜய்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவருக்கென்று தனி ரசிகர் மன்றமே உள்ளது. பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் இதன் மூலம் செய்யப்படுகின்றன. மேலும் இவரின் படம் எப்பொழுது வரும் என்று காத்திருப்பவர்கள் அதிகம். இவரின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியிடுவதற்காக பலரும் காத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இவருக்கும் இவரது அப்பாவிற்கும் இடையே அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்காக பல சண்டைகள் உருவானது. இந்த செய்தியும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவியது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

பிகில் படத்திற்கு அவர் 80 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. இவ்வாறு இருக்கையில் அவரது சொத்து மதிப்பும் அதிகம் தான். அவரது மனைவி சங்கீதா இலங்கையை சேர்ந்தவர். லண்டனில் அவருக்கு ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளது.

இந்நிலையில் சங்கீதாவின் சொந்த நாடான இலங்கையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியுள்ளார் விஜய். தற்போது அதனை அங்குள்ள முதலாளிகள் வளைத்து போட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இலங்கை சென்ற விஜய் இந்த பிரச்சனையை தீர்த்து வைத்து வந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here