அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியா நாட்டு டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தவறுதலாக போட்டியின் நடுவர் மீது பந்தை அடித்ததால் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அமெரிக்க ஓபன் தொடர்:
நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஸ்பெயின் நாட்டின் டென்னிஸ் வீரர் நடால், ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடெரர் ஆகியோர் பங்கேற்கவில்லை. இதனால் இந்த தொடரில் செர்பியா வீரர் ஜோகோவிச் சுலபமாக பட்டத்தை வென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆட்டத்தில் தொய்வு:
ஆனால், விளையாட்டின் ஆரம்பத்தில் நன்றாக விளையாடிய ஜோகோவிச் பின் 5-4 என்ற கணக்கில் சறுக்க தொடங்கினார். அவர் ஆடும் முறை தவறு என்று ஒரு சர்ச்சை எழுந்தது. இதனால், தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தாத ஜோகோவிச் ஆட்டத்தை இழக்க ஆரம்பித்தார்.
கொரோனாவில் இருந்து மீண்டார் எஸ்பி பாலசுப்ரமணியம் – மகன் சரண் தகவல்!!
அவருக்கு எதிராக விளையாடிய ஸ்பெயின் நாட்டின் கரினோ 6-7 என்ற கணக்கில் ஆட்டத்தில் முன்னிலை வகித்தார். இதனால் கோபம் அடைத்த ஜோகோவிச் பந்துகளை சரமாரியாக வீசியுள்ளார்.
காயம் அடைந்த நடுவர்:
ஒரு கட்டத்தில் அவர் எறிந்த பந்து போட்டியின் நடுவராக இருந்தவரின் மீது விழுந்துள்ளது. பந்து வேகமாக அவரது முகத்தில் பட்டதால் வலியில் துடித்தவரிடம் ஜோகோவிச் உடனடியாக சென்று மன்னிப்பு கோரியுள்ளார்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இதனால், தலைமை நடுவரிடன் இந்த விவகாரம் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரை இந்த போட்டிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
ஜாகோவிச் வருத்தம்:
இந்த விவகாரம் குறித்து ஜோகோவிச் கூறுகையில் “நான் வேண்டும் என்று இதனை செய்யவில்லை. இந்த சூழ்நிலை எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது. என் நடத்தைக்காக அமெரிக்கா ஓபன் நிர்வாகத்திடம் மன்னிப்பு கோருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.