கொரோனாவில் இருந்து மீண்டார் எஸ்பி பாலசுப்ரமணியம் – மகன் சரண் தகவல்!!

0

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து விட்டதாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள வீடியோவில், எஸ்பிபி அவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக கூறியுள்ளார்.

எஸ்பிபி உடல்நிலை:

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களுக்கு ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது நாட்களுக்குப் பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எஸ்பிபி குறித்து இன்று நல்ல செய்தி வரும் என கூறி இருந்த அவரது மகன் சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் எஸ்பிபி அவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

SPB and his son
SPB and his son

எஸ்பிபி சரண் தெரிவித்திருப்பதாவது, நுரையீரல் பாதிப்பு காரணமாக தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நல்ல செய்தி என்னவென்றால், எஸ்பிபி அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டதை விட நுரையீரல் பாதிப்பு விரைவில் குணமடைய வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நுரையீரல் பாதிப்பு சரியாக இன்னும் சில நாட்கள் ஆகும் என கூறியுள்ள சரண், இந்த வார இறுதியில் அப்பா-அம்மாவின் திருமண நாளை கொண்டாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அச்சு அசலாக நயன்தாராவை போலவே காட்சியளிக்கும் அனிகா – குழப்பத்தில் ரசிகர்கள்!!

டென்னிஸ், கிரிக்கெட் தொடர்கள் தொடங்கியுள்ளது எஸ்பிபி அவர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளதாக சரண் கூறியுள்ளார். மேலும் ஐபிஎல் போட்டிகளை எதிர்பாரத்து எஸ்பிபி காத்திருப்பதாக தெரிவித்த சரண், எழுத்து மூலமாக தங்களுடன் அதிகமாக பேசி வருவதாக கூறியுள்ளார். அவரது மனநிலை சீராக உள்ளதாகவும், எஸ்பிபி குணமடைய பிராத்தனை செய்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக சரண் தனது வீடியோவில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here