தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக ரூ. 4 கோடிக்கு மேல் அபராதம் – 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைது..!

0

இந்தியாவில் மே 17 வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதால் விதிகளை முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. விதிகளை மீறி உரிய காரணமின்றி வெளியே வருபவர்களை தமிழக போலீசார் கைது செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

4 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம்:

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5560 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை மொத்தமாக 4,42,621 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 3,65,390 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 4,16,998 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.4,73,99,479 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் 2 நாட்களில் ரூ. 294 கோடி டாஸ்மாக் வசூல் – ‘மது’ரை தான் டாப்..!

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை தினமும் 30 நிமிடத்திற்கு ஒருமுறை காலை 7 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்து உள்ளது. ஏப்ரல் 24ம் தேதி முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அதன் வரிசை எண் அடிப்படையில் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here